நாட்டுக்கு கடல் வழிப் பயணமானார் 25 வயது இளைஞரான ஜூலியஸ் சீஸர்.
எதிர்பாராதவிதமாக கப்பலில் இருந்த அனைவரும் கடற்கொள்யளயர்களால்
பிடிக்கப்பட்டார்கள். ‘20 தங்கக் காசுகள் கொடுத்தால், உங்கள் ஒரு நபரை
விடுதலைசெய்கிறோம்’ என ஒவ்வொருவரின் நாட்டுக்கும் தனித்தனியாகத்
தகவல் அனுப்பினார்கள். உடனே சீஸர் கோபமாகி, ‘‘என் விலை 20 தங்கக்
காசுகள்தானா?! என்னைக் கேவலப்படுத்தாதீர்கள். 50 தங்கக் காசுகளாவது
கேளுங்கள்’’என்றார் தோரைணேயாடு. கொள்ளையர்கள் அலட்சியமாகச்
சிரிக்க, ‘‘சிரிக்காதீர்கள்.உங்கள் அனைவரையும் கழுத்தை அறுத்துக்
கொன்றுவிட என்னால் முடியும்’’ என்றார்.
கொள்ளையர்கள் மேலும் சிரித்தார்கள். சக பயணி ஒருவர், ‘‘எதற்காக இப்படி
உன்னை நீயெ உயர்வாகப் பேசி கொள்கிறாய்! அது உனக்கே ஆபத்தாக
முடியலாம்’’ என்று எச்சரிக்க, ‘‘நான் யார் என்பதை நான்தான் சொல்ல
வேண்டும். எனக்காகப் பிறர் விளம்பரம் செய்யமாட்டார்கள். அரச நீதி
நூல்களில் சொல்லியிருப்பைதத்தான் நான் கைடைப்பிடித்து வருகிறேன்’’
என்றார் சீஸர்.பின்னர், 38 நாட்கள் பணய கைதியாக இருந்து வெளியே
வந்ததும், பலம் மிக்க ஆட்கைளத் திரட்டிக்கொண்டு போய்
கடற்கொள்ளையர்களுடன் போரிட்டு, தான் சொன்னது போலவே அவர்கள்
அத்தனை பேரையும் கழுத்தை அறுத்துக் கொன்றார்.
இந்த வெற்றியைப் பெரும் பொருட்செலவு செய்து கொண்டாடினார். ‘‘ஏன்
இப்படிச் சுயதம்பட்டம் அடிக்கிறர்கள்?’’ எனப் பிறர் கேட்டேபோது, ‘‘உன்
தகுதியை நீயே உரக்கச்சொல். பிறருக்காகக் காத்திருக்காதே!’’ என கூறினார்.
Comments
Post a Comment