எதிர்பாராத சமயத்தில் ஒருவர் இந்தியாவிற்காக ,ஆங்கிலேயர்களை
எதிர்த்து ஒரு படையை ஒரு தனி மனிதர் அமைப்பார் , என்று யாருமே
எதிர்பார்க்கவில்லை,
INDIAN NATIONAL ARMY FOUNDER
ICS தேர்வில் இந்தியாவிலேயே 4 வது இடத்தில் வந்தும் அரசாங்க
வேலையை தொடரவில்லை
ஒரு விமான விபத்தில் இவர் இறந்ததாக சொல்லபட்டாலும் இவர் உடல்
கிடைக்கவில்லை
பிரிட்டனில் 25.10.1945ஆம் நாள் பிரதமர் கிளமண்ட அட்லீ தலைமையில்
நடந்த காபினட் கூட்டம் வரலாற்றில் மிக முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வு
அந்தக் கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்
முக்கியத்துவம் வாய்ந்தவை. பிரிட்டிஷ்
அரசே பதிப்பித்த ஆட்சி மாற்றம் என்ற நூலில்
இந்தியாவில் ஒரே எதிரியாகப் போஸ்
வருணிக்கப்பட்டார். அவரைக்
கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வந்து என்ன
தண்டனை அளிப்பது என
அமைச்சரவை விவாதித்துள்ளது.
ஆக போஸ்
இறந்து விட்டது உண்மையாக இருக்குமானால் அவர்
இறந்ததாக அறிவிக்கப்பட்ட இரண்டு மாதம்
கழித்து பிரிட்டிஷ் அரசின் அமைச்சரவை போஸைக்
கைது செய்வது பற்றி எப்படி விவாதித்திருக்க
முடியும்?
பிரிட்டிஷ் – இந்திய அரசு பிரிட்டனில் உள்ள
அரசுக்கு 23.10.1945 ஆம் நாள் அனுப்பிய
கடிதத்தில் போஸைக் கைது செய்தால்
நாடே கொந்தளிக்கும் “அவர்
எங்கிருக்கிறாரோ அங்கேயே இருக்கட்டும்.
அவரை சரண் அடைய வற்புறுத்தாதீர்கள்”
என்று குறிப்பிட்டிருந்தது.
மர்மங்கள் நிறைந்த மாபெரும் மனிதரின் வரலாறு மீள்வது எப்போது.
Comments
Post a Comment